
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பிரதேசத்தில் வீட்டின் உள்ளே சமையல் அறையில் வடிசாராயம் வடித்துக்கொண்டு இருந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 15 லீற்றர் வடிசாராயம் மற்றும் வடிசாராயம் வடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

