பல்கலைக்கழக மாணவன் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரம்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சிங்கராஜா விடுதியில் தங்கி படித்த ஹர்ஷ தனஞ்சய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply