வீடு தோறும் சேதனப் பசளைகளுக்காக நகரசபையின் புதிய முயற்சி

<!–

வீடு தோறும் சேதனப் பசளைகளுக்காக நகரசபையின் புதிய முயற்சி – Athavan News

வீடுதோறும் சேதனப் பசளைகளை உருவாக்கும் முயற்சி இன்று (ஞாயிற்க்கிழமை) நகரசபையினால் தாண்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த முயற்சியானது வவுனியா நகர சபைத்தலைவர் இ. கௌதமனின் வழிகாட்டலில் நகரசபை உறுப்பினர் சு. காண்டீபனின் கோரிக்கைக்கு அமைவாக தென்னம்மட்டைகள், மரக்கழிவு என்பவற்றை துகள்களாக்கி முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய வீடுகளில் சேதனப்பசளையை உருவாக்கி வீட்டுத்தோட்டங்களை ஊக்குவிக்கும் முகமாக பரீட்சார்த்த ரீதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.


Leave a Reply