மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

<!–

மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் – Athavan News

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் சற்று முன்னர் பெலியத்த நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.


Leave a Reply