உந்துருளியின் சாகசத்தால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி!

உந்துருளியும் துவிச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னால் வந்த உந்துருளி சாகசங்களை செய்துகொண்டு வந்ததால், தான் துவிச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்ததாக உயிரிழந்த மாணவியுடன் சென்ற பெண் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உந்துருளி துவிச்சக்கரவண்டியை மோதிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

[embedded content]

Leave a Reply