விகாரையில் மூன்று சிறார்களை துஷ்பிரயோகம் பிக்கு

காலி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மூன்று சிறார்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அங்குள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுவர் பிக்கு உள்ளிட்ட மூன்று சிறார்களையும் தனது உடலை மசாஜ் செய்ய மூத்த பிக்கு நிர்ப்பந்திக்கும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்கு தெரணம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியில் ஒரு மூத்த பிக்கு, இரண்டு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு சிறு பிக்குகளை தனது உடலை மசாஜ் செய்ய வைப்பது பதிவாகியுள்ளது.
ஒரு விஷயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிறுவன் ஒருவரின் முகத்தில் மூத்த பிக்கு அடிப்பதையும் வீடியோ காட்டுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply