கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு- ஒருவர் படுகாயம்!

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பிறகு ஹென்லி வீதி, இல்ஃபோர்டில் நடந்த சண்டையின் போது, ஆயுதம் ஏந்திய பொலிஸார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரில் ஒருவர் 20 வயதுடையவர் எனவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றொருவர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாகவும் பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்களை முன்வருமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும் இத்தாக்குதலின் நோக்கம் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply