நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க யாழ் .விஐயம்

<!–

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க யாழ் .விஐயம் – Athavan News

நாட்டின் முதல் பெண்மணியும் களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply