மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம்!

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம் – ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏ9 வீதி ஊடான போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

வெட்டப்பட்ட மரங்களை ஏற்றிக் கொண்டு ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி சென்ற கனரக வாகனம் இன்று (26.10) மாலை ஓமந்தை, பன்றிக்கொய்தகுளம் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்ததுடன், சுமார் ஒரு மணிநேரம் ஏ9 வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது. சம்பவ இடத்திறகு வருகை தந்த ஓமந்தைப் பொலிசார் போக்குவரத்தை சீர் செய்ததுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *