காந்தாரா படத்தில் இடம்பெறும் காட்சிகள் திருடப்பட்டதா?

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது.

இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். காந்தாரா இப்படத்தில் பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்தகர்கள் படும் துயரத்தையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்த படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது இந்து அமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கேரளாவில் உள்ள தைக்குடம் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இசைக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *