வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பொன்று வெளியிட்ட பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இந்த திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அந்தப்ப பதிவில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.