மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்

<!–

மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம் – Athavan News

மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் இச்சம்பம் இடம்பெற்றிருந்தது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று திஹகொட பகுதியை நோக்கி இன்று (சனிக்கிழமை) செல்லவுள்ளமை குறிப்பிடதக்கது.


Leave a Reply