யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது.
பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப்பதனால் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




பிற செய்திகள்
- ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க?
- உயரிய அரச விருதை வென்ற தமிழ் அரசியல் கைதி!
- மொட்டுக்குள் மீண்டும் சிக்கல்: மூன்றாக பிளவடைந்த மஹிந்த அணி!
- தமிழ் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ்!
- சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பம்?
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

