யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்தை ரயில் மோதித் தள்ளியதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.
ரயில் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த வாகனச் சாரதி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.






