பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை முகாம்களில் தங்கவைக்கவும் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பணித்துள்ளார்.

மேலும் வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. மழைக்காலம் சவாலான காலம், அதை மக்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Leave a Reply