நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்திருந்த அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் அனுமதிக்காது.
பாடசாலைகளில் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மாகாண திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






