அழகுக்கலை நிலையங்கள் ஊடாக பெண்களிடம் பரவும் போதைப்பொருள்

இலங்­கை­யில் பெண்­க­ளி­ட­மும் உயிர்­கொல்லி போதைப் ­பொ­ருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது. அழ­குக் கலை நிலை­யங்­கள் ஊடா­கவே அவர்­கள் உயிர்­கொல்லி போதைப்­பொ­ருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கின்­ற­னர் – இவ்­வாறு தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்­கள் கட்­டுப்­பாட்டுச் சபை­யின் மேல­திக ஆலோ­ச­கர் லக்மீ நிலங்க தெரி­வித்­துள்­ளார்.

பாட­சாலை மாண­வர்­க­ளி­டம் உயிர்­கொல்லி போதைப்­பொ­ருள் பாவ­னையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டம் குளி­யா­பிட்­டி­ய­வில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்­து­ரைத்த அவர்;

அதி­க­ள­வான பெண்­க­ளி­டம் தற்­போது உயிர்­கொல்லி ஐஸ் போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக குரு­நா­கல் மாவட்­டத்­தி­லேயே இந்த நிலை பதி­வா­கி­யுள்­ளது. ஆண்­களை விட­வும் பெண்­க­ளுக்கே பாதிப்பு அதி­க­மா­க­வுள்­ளது.

அழ­குக் கலை நிலை­யங்­க­ளின் ஊடாக இந்­தப் பழக்­கத்­துக்கு பெண்­கள் அடி­மை­யா­கின்­ற­னர். அடிக்­கடி அழகுக் கலை நிலை­யங்­க­ளுக்குச் செல்­லும் தங்­க­ளது பிள்­ளை­கள் குறித்து பெற்­றோர் அவ­தா­னத்­து­டன் செயற்­படவேண்­டும் – என்­றார்.

Leave a Reply