ஓம் நமச்சிவாய லிகித ஜெபமும் சிவ ஆராதனையும்..!

சண்டிலிப்பாய் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் உபதேச திருக்கோவிலில் ஓம் நமச்சிவாய லிகித ஜெபம் அங்குராப்பண வைபவ நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராக இளங்கோவன் கலந்து கொண்டார்.

சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல ஆலயங்களினுடைய அறங்காவலர்கள், அடியார்கள் போன்றோர் கலந்து கொண்டார்கள்.

இடர் சூழ்ந்த கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட, அனைவரும்
ஓம் நமச்சிவாய மந்திரத்தை எழுதி வேண்டியுள்ளனர்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த லிகித ஜெப நிகழ்வு வரும் 25ம் திக்தி சிவ ஆராதியுடன் பூர்த்தியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply