நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.57 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதோடு, 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் புதுடெல்லி நகரிலும் உணரப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply