பாடசாலை புத்தகங்கள் விலை அதிகரிப்பு குறித்து லக்ஷ்மன் நாடாளுமன்றில் கேள்வி!

<!–

பாடசாலை புத்தகங்கள் விலை அதிகரிப்பு குறித்து லக்ஷ்மன் நாடாளுமன்றில் கேள்வி! – Athavan News

பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவிதார்.

எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply