
நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாகக் முறைப்பாடு கிடைத்துள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிறுவனத்தின் அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் சிலிண்டரின் தன்மையை வேறு தரப்பினருக்கு மாற்றவோ, விற்கவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படுவதில்லை.
ஆகவே எமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நியாயமான வகையில் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





