<!–
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






