யாழ் தீவகம் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் வேலனை பகுதியில் காணப்படுகின்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்க நிகழ்வு இன்று வேலணை பகுதியில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்களின் பெற்றோர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது
ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.