ஓமானிலிருந்து மேலும் இரண்டு பெண்கள் நாட்டுக்கு!

ஓமான் நாட்டில் இருந்து இரு இலங்கை பெண்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வேலை நிமித்தமாக ஓமான் நாட்டிற்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் குறித்த  இரண்டு பெண்களும் நாடு திரும்பியுள்ளனர். 

இன்று அதிகாலை இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஓமானில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த இரு பெண்களே இவ்வாறு அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு திரும்பிய இரு பெண்களும் அவர்களது உறவினர்களிடம் இருந்து கிடைத்த பணத்தில் விமானப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *