நில்வளா கங்கையில் முதலையால் பிடிப்பட்ட நபரின் சடல எச்சங்கள் மீட்பு!

மாத்தறை, பீக்வெல்ல, நில்வளா கங்கைக்கு அருகில் நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்துள்ளது.

குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு சோடிக் காலணிகள் குறித்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர் .

சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply