வீட்டில் சடலமாக அழுகிய நிலையில் கிடந்த இளம் நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி

மிர்சாபூர் வெப்தொடரில் லலித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா மும்பையில் இருக்கும் வெர்சோவா பகுதியில் வசித்து வந்தார். 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு நவம்பர் 29ம் திகதி நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவருக்கு கேஸ்ட்ரிக் பிரச்சனைக்கு மருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரம்மாவின் வீட்டில் இருந்து ஏதோ நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸார் வந்து போலி சாவிகள் செய்பவரின் உதவியுடன் வீட்டின் கதவை திறந்தார்கள். பாத்ரூமுக்கு சென்று பார்த்தபோது பிரம்மா மிஸ்ராவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரின் உடலை கைப்பற்றிய பொலிஸார் அதை பிரேத பரிசோதனைக்காக டாக்டர் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பிரம்மா மிஸ்ரா மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரம்மா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரம்மா மிஸ்ராவின் திடீர் மரண செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்கள் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது.

பாலிகா வது சீரியல் புகழ் சித்தார்த் சுக்லா 40 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் 46 வயதில் மாரடைப்பால் இறந்தார். இயக்குநர் ராஜ் கௌஷல் 50 வயதில் மாரடைப்பால் இறந்தார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply