இலங்கையில் பிடிக்கப்பட்ட அரிய வகை புலி இனம்!

மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது

இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்பிடி பூனை பொதுமக்களினால் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது.

Leave a Reply