.40.53_638ce5276b7f7.jpeg)
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தென் மாகாண உள்ளூராட்சி மன்ற (காலி) உறுப்பினர் சம்பிக்க நிறைச்சலி தெரிவிக்கையில்:
அதாவது நாங்கள் கேபேஃ என்ற நிறுவனத்தால் ஜனனி என்ற வேலை திட்டம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்தோம் .மற்றும் பல பிரதேசங்களில் ஆரம்பித்தோம் .இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பது குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம்.
உண்மையில் 56% வீதம் பெண்களிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.ஆனாலும் இங்கே குறைவாகவே உள்ளது. வேறு பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது.ஆனால் அரசியலில் பெண்களின் பங்களிப்போ குறைவாக உள்ளது.
உண்மையில் பெண்கள் அரசியலிற்குள் , கணவர் இருந்தோ, அல்லது தமது குடும்பம் அரசியலில் , இருப்பதால் நுழைகின்றனர். சந்திரகா குமாரதுங்க அம்மையாக இருக்கட்டும் , ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களும் இவ்வாறான சூழ்நிலைகளிலே அரசியலிற்கு வந்தனர்.
இருப்பினும் அவர்களின் பாரிய பங்களிப்பு வழங்கினார்கள்.பலரிற்கு இவ்வாறான வாய்ப்பு இல்லை என்றார்.