கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

<!–

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்! – Athavan News

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து மீது வீதியில் இருந்த மாடுகள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *