யாழில் நவீனமுறையில் உருளைக் கிழங்கு உற்பத்தி உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில், யாழ்  மாவட்ட நவீன விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் இணைந்து யாழ்.மாவட்டத்தில் நவீனமுறை உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளன.

இதில் சுமார் 190 விவசாயிகள் கலந்து கொண்டிருந்ததோடு சுமர் 190 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதமசெயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எ.சிவபாலசுந்தரம், வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்ட பணிப்பாளர் வி.விஜிதன், விவசாய போதனாசிரியர்கள், ISP நிறுவன உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *