சுற்றுலா வரும் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு பிசிஆர் அவசியமில்லை என அறிவிப்பு

<!–

சுற்றுலா வரும் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு பிசிஆர் அவசியமில்லை என அறிவிப்பு – Athavan News

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 12 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply