பதுளை சிறைச்சாலையில் கடும் மோதல்: 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு காயமடைந்த கைதிகள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வரும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை!

Leave a Reply