பேரூந்துகளின் கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

பேரூந்துகளின் ஆரம்பக் கட்டணங்களை முதல் கட்டமாக 2 ரூபாவால் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பேரூந்துகளின் ஆரம்பக்கட்டணங்கள் 16ரூபாவாக அறவிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேரூந்துகளின் ஆரம்பக்கட்டணம் 14 ரூபாவாக அறிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேரூந்துகளின் கட்டண மீளமைப்புக்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *