புளியங்குளத்தில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: மூவர் காயம்!

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு புகுந்ததில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தெல்லிப்பழையில் மரம் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாப மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *