இலங்கையில் குவியும் போலி நாணயத் தாள்கள்! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் தொடர்பில், மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதன் பின்னர், அந்த நாணயத்தாளை வழங்கிய நபர், அவரது வெளி தோற்றம், வாகனத்தில் வந்திருந்தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும்.

அத்துடன், 0112422176 மற்றும் 0112326670 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியுடன் கூட்டணி அமைக்க ஆளும் தரப்பு பேச்சு! நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *