வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் என கோரி ஓட்ட‌மாவ‌டியில் சிலர் போராட்டம்!

வடக்கு  கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் க‌ல்குடாத்தொகுதி அமைப்பாள‌ர் ச‌ல்மான் வ‌ஹாப் த‌லைமையில் மட்டக்களப்பு  ஓட்ட‌மாவ‌டியில்  ந‌டை பெற்ற‌ க‌வ‌ன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்ட‌த்தில் பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கை இணைப்ப‌த‌ற்கு துணை போகும்  முஸ்லிம் காங்கிர‌சின் துரோக‌த்த‌ன‌த்தை கண்டிக்கின்றோம் கிழக்கு தலைமைகளின் அனுமதியற்ற தீர்வுகளை ஏற்க மாட்டோம் வடக்கு கிழக்கினை இணைக்காதே போன்ற வாசகங்களுடன் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் வடகிழக்கு இணைவிற்கு  எதிராக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் ஊடக மாநாடுகளும்  க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துப்ப‌ட்டு வ‌ருவதாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *