இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

டிசம்பர் மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த சபையின் பணிப்பாளர் நாயகமான தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *