சூடானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் பலி!

தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள எல் நுஹுத் நகருக்கு அருகில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

செயல்படாத நிலையில் இருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆபிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *