வடக்கு கிழக்கு மக்கள் போரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்து துன்பத்தில் உள்ளனர். ஆகவே அவர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் மாகாண சபை தேர்தல் நடைபெற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கழகம் தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் எந்த நாடும் கால் பதிக்கட்டும். ஆனால், எமது வளங்கள் களவாடப்படாமல், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
வேறு எந்த மாவட்டத்தில் தேர்தல் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை, வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டும்.
ஏனென்றால் நாமே எங்களை நிர்வகிக்க வேண்டும். இப்போது வேறு நபர்கள் எம்மை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் போராட ஆரம்பித்தமைக்கு காரணம், தனி சிங்கள ஆதிக்கம் தமிழ் மக்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தமை தான்.
இந்த வரலாறுகள் தெரியாமல் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தற்போது வேறு கதைகள் எல்லாம் கூறிக்கொள்கிறார்.
படிக்காதவர் பிரபாகரன் என்று சொல்கிறீர்கள், உங்கள் எல்லோரையும் 30 வருடம் எப்படி அடக்கி வைத்திருந்தார் என சிந்திக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரமொன்றில் மோதி கால்வாயில் விழுந்தது மோட்டார் சைக்கிள்! – ஒருவர் பலி: இருவர் காயம்