போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால், பணத்திற்காகவே வயோதிபப் பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சங்கேத நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஓட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு சோடி தோடு, ஒரு சோடி காப்பு, சங்கிலி ஒன்று, 2 மோதிரங்கள் ஆகிய ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றையதினம் கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய 67 வயதான பெண் காணாமல் போன நிலையில், சடலம் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.