பிரபாகரனை விட நாட்டுக்கு தீங்கிழைத்தவர்கள் ராஜபக்ஷர்களும் சகாக்களுமே – சம்பிக்க சாடல்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷர்களும் அவர்களது சகாக்களுமே இந்த நாட்டுக்கு பாரிய தீங்கினை செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடு எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட ராஜபக்ஷ குடும்பமே பொறுப்புக் கூற வேண்டும் என கூறினார்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற அபிவிருத்தி திட்டங்களே காரணம் என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, விளையாட்டு மைதானம், தாமரை தடாக அரங்கம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு எவ்வித இலாபத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த அபிவிருத்தி பணிகள் ஊடாக அரச நிதி பாரிய அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *