சர்வதேச தளங்களில் ஒமிக்ரான் தரவுகள் உறுதியாகவில்லை!

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் தரவுகள் சர்வதேச தளங்களில் உறுதியாகவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மூன்று பேருக்கு ஒமிக்ரான் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் சர்வதேச தரவுத்தளங்களில் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறுகிறது.

எனவே இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வகத்தின் தரத்தை அங்கீகரிக்காததால் இது ஏற்பட கூடும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

நீண்ட கால அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்துடன் சோதனை நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *