தற்காலிகமாக மூடப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளது.

எனினும், நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *