திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக மீனை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக கெப் வாகனம் இன்று வியாழக்கிழமை (30) மாலை தோப்பூரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தோப்பூர் – தயிர்வாடி வளைவுப் பகுதியில் வைத்து குறித்த கெப் வாகனம் பாதையைவிட்டு விளகி தலைகீழாக பிரண்டுள்ளது.

எனினும் வாகனச் சாரதியும், உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி மீனை ஏற்றிக் கொண்டு பயணித்த கெப் வண்டியே இவ் விபத்தை  எதிர்நோக்கியுள்ளது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *