2030இல் அதிகரிக்கும் இலங்கையின் வயோதிபர்களின் சனத்தொகை! வெளியான தகவல்

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வயோதிபர்களின் சனத்தொகை 21% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வயோதிபர் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் 14.6% என்ற அளவில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதியோர்களுக்கான தேசிய சபையின், 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அந்த சபை வழங்கிய வயது வயோதிபர் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 62,279 ஆகும்.

Leave a Reply