யாழ்ப்பாண கடல் பரப்புகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடும் , இந்திய மீனவர்களின் நடவடிக்கைளை கண்டித்து மயிலிட்டி துறைமுகம் முன்பாக தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,அத்துடன் அவர்களின் படகுகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தற்போது மீனவர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.