நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதற்கான பொறுப்பை அமைச்சர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதால், இந்த நாட்டில் உள்ள மக்களை பட்டினி கிடக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
இறக்குமதி நிறுத்தப்பட்ட போது, உள்ளூர் அரிசி மாஃபியா பொருட்களின் விலையை உயர்த்த முயற்சித்தது.
அடுத்த வருடம் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி போன்ற அரிசி வகைகளின் விலைகள் 100 ரூபாய்க்கு குறைவாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.
வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் விலைக்கு என இரு தீர்வுகள் இல்லை. பொருட்களின் விலை உயர்விற்கு ஒரே தீர்வு உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதுதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.