தமிழர் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை!

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் சால்வைகள் அணிந்து குடும்பத்தோடு வயலுக்கு மாட்டு வண்டியில் பயணித்து , பூஜைகள் நடாத்தி  சென்று நெல் அறுவடை செய்து புதிர் எடுக்கும் பாரம்பரிய புதிர் அறுவடை செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் -மணற்சேனை பகுதியில் இடம்பெற்றது.



மூதூர் -மணற்சேனை சித்திவிநாயகர் ஆலய நிருவாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதில்  விவசாய அமைப்புக்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply