ஐக்கிய மக்கள் சக்தி புத்தளத்தில் ஏற்பாடு செய்த புதுவருட நிகழ்வு

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் அலுவலகம் ஏற்பாடு செய்த புதுவருட நிகழ்வுகள் இன்று பாலாவியிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுது அமைப்பாளரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமா ஹெக்டர் அப்புஹாமி, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கிஸ்லி லால் பர்னாந்து, துஷார பத்திரன உட்பட பிரதேச, நகர சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, மேற்படி புதுவருட நிகழ்வுக்கு சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, பால் பொங்கல் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, வருகை தந்த அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

புதிய வருடத்தை கொண்டாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மோசமான நிலையில் காணப்படுவதே இதற்கு காரணமாகும்.

தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு இந்தியா செல்வதற்கு டொலர் இருக்கிறது. ஆனால், நாட்டு மக்களின் அன்றாடத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நாட்டில் டொலர் இல்லையாம்.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கிறது.

எரிவாயு, பால்மா, பெற்றோல் என எல்லாவற்றுக்கும் வரிசையில் காத்து நின்று மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகிறார்கள்.

எனவே, மக்களை பட்டினியில் போடாமல் அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! சஜித் காட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *