சிவனடிபாதமலைக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த அவலம்

சிவனடிபாதமலைக்கு தரிசிக்க வந்த நபரொருவர் தவறிவிழுந்ததில் எலும்பு முறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தரை பகுதியில் இருந்து வந்த 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தைக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மொகமட்பாயிஸ் நேற்று 2 ம் திகதி தரிசித்து விட்டு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், சியத்தல கங்குல பகுதியில் கால் தடுக்கி படிகளில் விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 1990 ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *